districts

img

அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி !

சிதம்பரம், ஜூலை 26- சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு அரசுத் துறையில் இணைக்கும் அர சாணையை வெளியிடாமல் இருப்பதால் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே, உடனடியாக அரசு துறை யுடன் இணைக்கும் அரசாணை வெளியிட வலியுறுத்தி சிதம்பரத்தில் விசிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். விசிக கடலூர் கிழக்கு மாவட்ட செய லாளர் அரங்க தமிழ்ஓளி தலைமை தாங்கி னார். பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், முதன்மை செயலாளர் ஏ.சி. பாவரசு,  கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். சித்தார்த்தன் (காங்கிரஸ்), ராஜா, ஜெயச்சித்ரா, நகர்மன்றத் துணைத் தலை வர் முத்து குமரன் (சிபிஎம்), தமிமுன் அன்சாரி (சிபிஐ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன்,“ சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து மருத்துவத்துறையில் இணைக்கும் கருத்துரு உருவாக்கப்பட்டது.  ஆனால் இன்று வரைக்கும் தமிழக அரசின் மருத்துவ துறையோடு ஒருங்கி ணைக்கப்படவில்லை”என்றார்.