தமிழ்நாடு வருவாய்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாலை முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி யுள்ளனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், ஸ்ரீதர், ராஜேஷ் பாபு, பூபாலச்சந்திரன், ஜான் பிரிட்டோ, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், இணை செயலாளர் பார்த்திபன், உதயகுமார்,சதாசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.