districts

img

மண்ணெண்ணெய் விநியோகத்தில் கோளாறு

கடலூர், பிப்.28- கடலூர் புதுப்பாளையத்தில் சரவண பவ கூட்டுறவு பண்டக சாலையில் மண்ணெண்ணெய் வழங்கும் இடத்தில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் ரேசன் கடை இயங்கி வரு கிறது. இங்கு பொது மக்களுக்கு பங்க் மூலம் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அடிக்கடி பங்க் பழுதாவதால் மண்ணெண்ணெய் வழங்குவதில் குளறு படி உள்ளது. மாதத்தில் ஒரு நாள் மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படுவதால் கூட்ட நெரிசலால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பொது மக்க ளுக்கு சரிவர மண்ணெண்ணெய் விநி யோகம் செய்யப்படுவதில்லை என்று மாநகர மேயருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டன.  அதன் அடிப்படையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள ரேசன் கடைக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பொழுது பொதுமக்கள் தங்களுக்கு சரிவர மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று தெரிவித்த னர். இதையடுத்து மேயர் சுந்தரி ராஜா அங்கு இருந்த ரேசன் கடை ஊழி யர்கள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு மாதத்தில் 3 முறை  மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். பொதுமக்கள் புகார் அளிக்க மேயரின் தொலைபேசி எண்ணை அங்கு உள்ள சுவற்றில் எழுதி வைத்துவிட்டு வந்தார். இந்த ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி,  மாமன்ற உறுப்பினர் சுபாஷிணி ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.