districts

img

வனவிலங்கு பாதிப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும் சிபிஎம் மாநாடு கோரிக்கை

கடலூர், அக். 15- வன விலங்குகளின் பாதிப்பு களில் இருந்து பயிர்களை பாதுகாக்க வன நிலங்களில் நீண்ட அகழி வெட்ட வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கட்சியின் வேப்பூர் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூர் வட்ட முதல் மாநாடு நல்லூரில் திங்கள் கிழமை நடைபெற்றது.மாநாட்டு கொடியினை ஏ. சாமிதுரை ஏற்றி வைத்தார். ஜி.வேல்முருகன் தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். டி.கருப்பையா வர வேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர். ரவிச்சந்திரன், எஸ்.திருஅரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். டி.ரத்தினசாமி, என். மணிவாசகம், எஸ்.ராயர், பி.அகிலா, கே.செல்வி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். பொன்.சோமு வரவு செலவு சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர் கோ.மாதவன் நிறைவுறையாற்றினார். எஸ்.இளையராஜா நன்றி கூறினார்.  வட்டக்குழு தேர்வு 11 பேர் கொண்ட வேப்பூர் வட்ட செயலாளராக  எஸ்.ராயர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஏ.சித்தூர் கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய ஏழு ஆண்டுகால கரும்பு பணத்தை வழங்கிட வேண்டும். வேப்பூர் வட்டத்தை குடிசை இல்லாத வட்டமாக மாற்றவும், அனைவருக்கும் மனைபட்டா வழங்கிட வேண்டும், பிஞ்சனூர் - இலங்கியனுர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், வேப்பூர் கிராம பஞ்சாயத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், வேப்பூர் வட்டத்தில் உள்ள மங்களூர், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.