districts

img

பயிர் காப்பீடு காலக்கெடு நீட்டிப்பு நடவடிக்கை: வேளாண் அமைச்சர்

கடலூர்,நவ.16- வடகிழக்கு பருவமழை தொடங்கு வதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 36 மணி நேரத்தில் கடலூரில் மட்டும் 18 செ. மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் நகரில் பல இடங்களில் வீடுகள் சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. முன்னேற்பாடு பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்வதற்காக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கடலூர் வருகை தந்தார். பின்னர் அவர் கடலூர் வில்வநகரில் உள்ள பெருமாள் குளம் மற்றும் அதன் அருகில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை யும், கடலூர் ஆட்சியர் அலுவல கத்தில் செயல்படும் பேரிடர் கால கட்டுப்பாட்டு அறையையும் பார்வை யிட்டார்.  அப்போது அவர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “கடலூர் மாவட்டம் பிற மாவட்டங்கள் வடிகால் மாவட்டமாக உள்ளது. இந்த ஆண்டு பருவமழை 23 விழுக்காடு குறைவாக பெய்துள்ளது”என்றார். மாநகராட்சி பகுதியில் 512 சிறு பாலங்கள் உள்ளன. வடிகால் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளன என்றும் இதுவரை 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 36 வீடுகள் பகுதி யாக சேதமடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பயிர்க்காப்பீடுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சம் பேர் பயிர் சாகுபடி செய்து, அதற்கு காப்பீடு செய்துள்ளார் என்றும் அமைச்சர் கூறினார். மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மாநகராட்சி மைய சுந்தரி ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.