districts

img

குடியிருப்புக்குள் புகுந்த முதலை

தாம்பரம், மார்ச் 16- வண்டலூர் பூங்காவின் பின்புறம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலையில் முதலை இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர். தாம்பரம் அருகே உள்ள கொளப்பாக்கம் ஏரியை ஒட்டி வரபிரசாத் நகர் உள்ளது. இது  வண்டலூர் பூங்காவின் பின்புறம் அமைந் துள்ளது. இந்த நிலையில் வர பிரசாத் நகருக்குள் செவ்வாயன்று  இரவு சுமார் 4 அடி நீளம் உள்ள முதலை ஒன்று  சுற்றி வந்த தைக்கண்டு நாய்கள் குரைத்தன. அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது சாலையில் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முத லையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து குடியிருப்புக்குள் புகுந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்புடன் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். மேலும் வரபிரசாத் நகர் பகுதிக்குள் வேறு முதலை புகுந்துள்ளதா என்று சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் முதலைகள் சிறிதாக இருக்கும்போது உணவுக்காக பறவைகள் தூக்கி செல் கின்றன. அவை தவறி பூங்காவை தாண்டி யுள்ள காட்டு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் விழுந்து வளர்ந்து வருகிறது. இப்படி வளர்ந்த முதலைகள் சதானந்தபுரம், நெடுங்குன்றம், கொளப்பாக்கம் ஏரி பகுதி களில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் பூங்காவிற்கு வெளியே தண்ணீருக்குள் இருக்கும் முதலைகளை பிடிப்பதில் சிரமம் என்பதால் அதனை தேடும் முயற்சி நடைபெறவில்லை. எனவே  வண்டலூர் பூங்காவின் பின்புறம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் முழுவதும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி முதலைகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.