districts

img

மூத்த தோழர் யு.ஜெயலட்சுமி உடல் தகனம்

சென்னை, பிப். 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் போரூர் பகுதி முன்னாள் நிர்வாகியுமான தோழர் யு.ஜெயலட்சுமி சனிக்கிழமையன்று (பிப்.3) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது வயது 76. மதுரவாயல் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உரு வாக்கி, வளர்த்தெடுத்தவர்களில் யு.ஜெய லட்சுமியும் ஒருவர். இவரது கணவர் 150வது வட்டம், காரம்பாக்கம் கிளையின் மூத்த உறுப்பினர் பி.கே.பைதல் மனைவி  ஆவார்.  தோழர் ஜெயலட்சுயின் உடல் போரூர் காரம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், எஸ்.குமார், எஸ்.சுந்தர், ஜி.செந்தில்குமார், மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அசோகன், எஸ்.சரவணசெல்வி, பகுதிக்குழு உறுப்பினர்கள் பி.ஜி.கே.ரமேஷ், எஸ்.பிச்சையம்மாள், தண்ட பாணி, மா. வை. கிருஷ்ணமூர்த்தி எம். எஸ்.ராஜேந்திரன், காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ, போக்குவரத்து ஊழியர் சங்க மூத்த தலைவர் எம்.சந்திரன், மாற்றுத் திறனாளிகள் சங்க மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் எஸ். மனோன்மணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் ஞாயிறன்று (பிப்.4) போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப் பட்டது.