செங்கல்பட்டு, மார்ச் 31- திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கட்சி அலுவ லகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் தலைமையில் நடைபெற்றது. கார்ப்பரேட்டுகளின் களவாணித்தனத்தை அம்பலப்படுத்தவும், வகுப்புவாதிகளின் அபாயத்தை வீழ்த்தவும், பறிக்கப்படும் உழைப்பாளிகளின் உரிமையை மீட்டெடுக்க வும், பலியாகும் அரசியலமைப்புச் சட்டத்தை யும், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாது காத்திடவும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வீடு வீடாகச் சென்று வெற்றி வேட்பாளர் க.செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மாநில குழு உறுப்பினர் எ.ஆறுமுக நயினார், மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்,மாவட்ட குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், முன்னணி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.