வேலூர், மே 9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மூத்த தோழர், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வேலூர் திட்ட துணைத்தலைவர் எம்.கே.ஜீவாவின் தந்தை சே.மு.கண்ணன் செவ்வாயன்று (மே 9) காலமானார். அவருக்கு வயது 88. வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஒ சாலை, தெற்கு அவென்யூவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், செ.ஏகலைவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன், எஸ்.பர சுராமன், வடக்கு கமிட்டி நிர்வாகி கள் ஏ.கோவிந்தசாமி, பி.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் புதனன்று (மே 10) காலை 10 மணியளவில் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.