districts

img

குடிநீரில் கலக்காமல் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை

விழுப்புரம்,செப்.4- விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத் துக்கு உட்பட்ட நவமால் மருதூர் கிராமத்தில் கடந்த  சில நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது.  இதனை பயன்படுத்திய  கிராம பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.   இந்நிலையில் அப்பகுதி யில் உள்ள   குளத்தை சீர மைப்பு செய்து, தூர்வார வேண்டும், அங்கு கழிவுநீர்  வாய்க்கால்களை சரி செய்து, குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க வேண்டும், பாதுகாக்கப் பட்ட குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளை போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும் என வலி யுறுத்தி திங்களன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சி யரிடம் சிபிஎம் சார்பில்  கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.  முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் துரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சவுந்தரராஜன், கே.சுந்தரமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட நிர்வாகி என்.பழனி, ஒன்றிய செயலாளர் கே.உலகநாதன், வட்டக் குழு உறுப்பினர் ராஜசேகர், கிளைச் செயலாளர் சக்கரபாணி உட்பட பலர்  உடனிருந்தனர்.