districts

img

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை சீரமைத்திடுக சிபிஎம் பகுதி மாநாடு கோரிக்கை

சென்னை, செப். 22 - வில்லிவாக்கம் பேருந்து நிலை யத்தை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் வில்லிவாக்கம் பகுதி 16வது மாநாடு ஞாயி றன்று (செப்.22) அயனா வரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், வில்லிவாக்கம் சிங்காரம் பள்ளி நிலத்தை தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அயன்புரம் ஆவின் பால்பண்ணை வளாக சாலையை சீரமைக்க வேண்டும், அயன்புரம் பாலவாயல் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு செங்கொடியை ஏ.துரைராஜ் ஏற்றினார். பகுதிக்குழு உறுப்பினர்கள் சி.மார்டின் வரவேற்க, வி.டில்லிபாபு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.அன்பழகன், ஆ.பிரியதர்ஷினி ஆகியோர் தலைமை தாங்க, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தொடக்கவுரையாற்றினார். வேலை, அமைப்பு அறிக்கையை பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகனும், வரவு செலவு அறிக்கையை பகுதிக்குழு உறுப்பினர் ஏ.எல்.மனோகரனும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ் மாநாட்டை வாழ்தி பேச, மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா நிறைவுரையாற்றினார். தீர்மானங்களை ஏ.விமலா, ஜெ.பி.யூஜின் பர்க் ஆகியோர் முன்மொழிந்தனர். பகுதிக்குழு உறுப்பினர் எம்.முரளி நன்றி கூறினார். 9 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக எம்.ஆர்.மதியழகன் தேர்வு செய்யப்பட்டார்.