districts

img

குடி மனைப்பட்டா கேட்டு புதுவையில் சிபிஎம் போராட்டம்

புதுச்சேரி, மே 23- அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கக் கோரி புதுச்சேரி ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட புதுவை நகராட்சி, உழவர்கரை நகராட்சி, வில்லியனூர், மண்ணாடிப் பட்டு, பாகூர் ஆகிய கொம்யூன் பகுதிகளில் பல ஆண்டுகாலமாக கோவில் நிலம், அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். நகர பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 3 மையங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில் இருந்து ஊர்வலமாக சென்று பேட்டையன்சத்திரத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதி ரில் நடைபெற்ற போராட்டத்திற்கு நகரச் செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகரச் செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த தலைவர் தா.முருகன் போராட்டத்தை துவக்கி வைத்தார். பிரதேச செயலாளர் இரா. ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சுதா, ராமச்சந்திரன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன், ரமேஷ், ஆனந்து, சஞ்சய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட ஆட்சியர் வல்லவனை சந்தித்து மனு அளித்த னர். விண்ணப்பங்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

வில்லியனூர்

வில்லியனூர் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நெட்டப்பாக்கம் கொம்யூன் செயலாளர் ராமமூர்த்தி, மண்ணாடிப்  பட்டு கொம்யூன் செயலாளர் ரகு.அன்புமணி ஆகியோர் தலைமை தாங்கினர். பிரதேசசெயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பிரதேச குழு உறுப்பினர்கள் சங்கர் .உலகநாதன், கொம்யூன் குழு உறுப்பினர்கள் மணிபாலன், இன்னரசு, விநாயகம், தட்சிணா மூர்த்தி, முத்து, அமிர்தவள்ளி, உமாவிநாயகம், புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வில்லியனூர் துணை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பாகூர்

பாகூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு கொம்யூன் செயலாளர் ப.சரவணன் தலைமை தாங்கினார். பிரதேச செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் கலியன், கொம்யூன் குழு உறுப்பினர்கள் வடிவேல், கவுசிகன், முருகையன், வெங்கடாச லம், அரிதாஸ், சதாசிவம், வளர்மதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வட்டாட்சியர் குப்பனிடம் மனு அளித்தனர்.