சென்னை மாநகராட்சி 5வது மண்டலம், சிந்தாதிரிப்பேட்டை சிங்கன்ன தெருவில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி கம்பத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இதனை கண்டித்து புதனன்று (பிப்.15) அங்கு கட்சியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிச்செயலாளர் கவிதா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயலாளர் வே.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.வேணுகோபாலன், கிளைச்செயலாளர் குணசீலன் ஆகியோர் பேசினர்.