சென்னை, ஆக. 30- தாம்பரம் மாநகராட்சியில் காலிமனை வரி உயர்வு, அரசுப்பணிகளை அவுட்சோர்சிங் (அயல்பணியாக) செய்வ தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் வெள்ளியன்று (ஆக.30) மேயர் வசந்தகுமாரி தலைமை யில் நடைபெற்றது. மண்டலம், பகுதி வாரியாக சொத்துவரி, காலிமனை வரிகளில் வேறுபாடு உள்ளது. இதனை மாற்றி ஒரே சீரான வரி விதிப்பை மேற்கொள்ளும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், சொத்துவரி மறுசீரமைப்பு செய்யப்பட்டும், காலிமனை வரி சதுர அடிக்கு 80 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பலப்பகுதிகளில் வரி அதிகரித்துள்ளது. மேலும், தொழில்நுட்ப உதவியாளர்கள், கணினி இயக்குபவர்களை அயல்பணி முறையில் கொண்டு வரவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாநகராட்சியில் உள்ள இடுகாடு மற்றும் சுடுகாட்டில் புதைப்ப தற்கு பிரேதம் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாயாக வும், எரிவாயு தகனம் செய்ய 3 ஆயி ரம் ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது மக்கள் விரோத செயல் இவற்றிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் 28வது வார்டு உறுப்பினர் ஜி.விஜய லட்சுமி எதிர்ப்பு தெரிவித்து பேசுகை யில், பொறியியல் பிரிவில், வெளியாட்கள் மூலம் பணி செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்துமே தனியார் மயத்தை நோக்கி சென்றால், பொறியியல் பிரிவில் பணிபுரியும் அதி காரிகள் எதற்கு? அதிகாரிகள் மீது மேயருக்கு நம்பிக்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். வரி விதிப்பில் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரி விதிப்புக்குழு விவாதிக்கவும், ஒப்புதல் தரவும் இல்லை. வரி விதிப்புக்குழு அனுமதி தராமல் எப்படி தீர்மானம் கொண்டு வரலாம்? மக்கள் மீது மேலும் மேலும் வரியை அதி கரிப்பது ஏற்க முடியாது. இது மக்கள் விரோத செயல் என்று சாடினார். இதனை தொடர்ந்து பிற உறுப்பினர்கள் பேசுகையில், “22வது வார்டில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை. ஆனால், அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும் கூறுகின்றனர். பல தெருக்களில் சாக்கடை மேல் தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது என்றனர். தாம்பரம் - வேளச்சேரி சாலையில், 10 வருடங்களுக்கு முன் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. சாலையின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதி வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர். 10 வருடங்கள் ஆகியும், அந்த வீடு களுக்கு மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட வில்லை” என்றும் அவர்கள் கூறினர்.