districts

img

பொதுப்பாதையை ஆக்கிரமித்த ஊராட்சி மன்றத் தலைவர் நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர், டிச 18 – அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்த புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரைக் கண்டித்தும், அதற்கு துணை போன வட்டாட்சியர், சார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருப்பத்தூரில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், புதுக் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட அருந்ததியின குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளாக  வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இம்மக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை ஊராட்சி மன்ற தலை வர் இ.குப்புசாமி ஆக்கிரமிப்பு செய்த தோடு அருகில் இருந்த புறம்போக்கு இடத்தையும் தனது மகன்கள் பேரில் பட்டா செய்திருக்கிறார். அவசர கதியில் அறை அமைத்து சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் சுமார் 3000 சதுர அடி இடத்தை போலி பத்திரங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவரின் இச்செய லுக்கு மாடப்பள்ளி கிராம நிர்வாக அலு வலரும்  உடந்தையாக செயல் பட்டுள்ளார். இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் முதல மைச்சரின் தனிப்பிரிவு என அனைத்திலும் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அருந்ததியின மக்கள் சென்று வந்த பொதுசாலையை ஆக்கிர மித்ததை மீட்டு, போலி பத்திரம் பதிவு செய்ததை ரத்து செய்து, அம்மக்க ளுக்கு சாலை அமைத்து தர வேண்டும். ஊராட்சியில் பல ஆண்டு களாக நடைபெற்று வரும் போலி பத்திர பதிவுகளை ரத்து செய்ய வேண்டும். இடிந்து விழும் நிலை யில் உள்ள சவரியம்மாள் போன்றவர்க ளுக்கு பிரதமர் அ முதல்வர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டும். அருந்ததியின காலனியில் பழுத டைந்த சாலைகளை சீரமைத்து, கழிவுநீர் கால்வாய் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சிபிஎம் திருப்பத்தூர் தாலுகாகுழு உறுப்பினர் ஆர்.ஆனந்தன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.டி சங்கரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.காத்தவராயன், எஸ்.ஜோதி, தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ், முன்னாள் செயலாளர் எம்.காசி ஆகியோர் கண்டன உரையாற்றினர். தாலுகாக்குழு உறுப்பினர்கள் ரவி, வெங்கடேசன், கேசவன், வீரபத்ரன், சரவணன், ஜெயராமன் மற்றும் கிளை உறுப்பினர்கள் ஜெய்சித்ரா,லட்சுமி, ஜான்போஸ்கோ, மர்த்தினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்துவதாக தெரிவித்தனர்.