districts

img

மந்தாரக்குப்பம் பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சிபிஎம் சார்பில் பெரியா குறிச்சி பேருந்து நிலையம், நால்ரோடு, புதிய பேருந்து நிலையம் ஆகிய 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, மாவட்ட குழு உறுப்பினர் எம்.சீனிவாசன், நெய்வேலி நகரச் செயலாளர் ஆர். பாலமுருகன்  கிளைச் செயலாளர் வீராசாமி, நகர குழு உறுப்பினர்கள் கே.மணி, எஸ்.முருகன், பி.பழனிவேலு, கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.