விழுப்புரம், ஆக.2- விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட சு.அஞ்சலி கிராமத்தில் 1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அங்கு வசித்து வந்த நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார். கல்வியறிவு இல்லாத அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை போலி ஆவணம் மூலம் சிலர் அபகரிக்க முயற்சி செய்தனர். இந்த தகவலை அறிந்த சிபிஎம் தலைவர்கள், நரிக்குறவர் இன மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தை அளந்து அத்துக்கட்டி கிராம கணக்கில் திருத்தம் செய்து பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வரைக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1 அன்று மாவட்ட வருவாய் அலு வலர் அலுவலகத்தில் விசாரணை நடை பெற்றது. அப்போது, பாதிக்கப்பட்ட பட்டாதார்கள், சிபிஎம் நிர்வாகி ஏ.ஆர்.கே. தமிழ்ச்செல்வன் தலைமையில் திரண்டு வந்தனர். இந்த கூட்டத்தில், அந்த இடத்தை அளந்து அத்துக் கட்டி சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒப்படைப்பு செய்வதாக உறுதியளித்தார்.