districts

img

வானூர் வட்டாட்சியரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,ஜன.31- லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஊறித்திளைக்கும் வட்டாட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் வானூர் வட்டாட்சி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் எம்.கே.முருகன் தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், ஆர்.ராஜேந்திரன்,சே.அறிவழகன், விதொச மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன் ஆகியோர் கலந்து கொண்டுபேசினர். ஆர்பாட்டத்தில்  வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலமுருகன், ஐ.சேகர், ஆர்.சேகர், வி.சுந்தரமூர்த்தி, ஏ.அன்சாரி, ஜெ.முகமது அனஸ், கே.நடராஜன், கே.மாயவன், ஆர்.விஸ்வநாதன்,என்.அசுவத்தாமன், கே.லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

;