திருச்சிராப்பள்ளி, மார்ச் 2- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட் மற்றும் மாமேதை காரல் மார்க்ஸ், மார்க்சியத்தை அவதூறாக பேசிய தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக திருச்சி ராப்பள்ளி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியக்குழு சார்பில் நடை பெற்ற ஆர்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பி னர் சந்திரமோகன், மாற்றுதிறனாளி கள் சங்க மாவட்ட துணைத் தலை வர்சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் தலை ஞாயிறு கடைத் தெருவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் வீ.மாரி முத்து கண்டன உரை ஆற்றினார். திருமுருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேருந்து நிலையத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். ஸ்டாலின் பாபு தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவருமான வி.சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார்.