districts

img

காவல்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கடலூர், செப்.12- காவல்துறையை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் வேலையின்மைக்கு எதிராகவும் செப்டம்பர் 7 அன்று ரயில் மறியல் போராட்டத்தை விளக்கி கடலூர் தானம் மற்றும் சின்னப்பன் தெருவில் வைக்கப்பட்ட தட்டியை கிழித்து எடுத்து சென்றதுடன் கருணாகரன், நாராயணன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையை கண்டித்து சிபிஎம் சார்பில் ஜவான் பவன் அருகில் திரு முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்ப ராயன், ஜெ.ராஜேஷ் கண்ணன்,  மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆளவந்தார், பக்கீரான், சிவானந்தம், பாஸ்கரன்,  மாநகர குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், கருணாகரன், பாபு,ஆனந்த், அருள், செந்தில், அய்யா துரை, பால்கி மனோரஞ்சிதம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.