ஏழை-எளிய மக்களை பாதிக்கும் சமையல்கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பூர் எஸ்.எம். நகரில் பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.ஜீவாமுனுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், பகுதிச்செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், பகுதிக்குழு உறுப்பினர் ஜெ.பிரமிளா, டி.சரவணன், கிளைச் செயலாளர் எம்.ராஜன் ஆகியோர் பேசினர்.