திரிபுராவில் பாஜகவினர் வன்முறை வெறியாட்டம் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆற்காடு காமராஜர் சிலை அருகில் மாவட்ட அமைப்பாளர் என். காசிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சி. பஞ்சாட்சரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் குண்டா (எ) இ. சார்லஸ், கி. சேகர், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, டி. சந்திரன், ஏபிஎம். சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் ப. பாக்கியராஜ், தொகுதி செயலாளர் அ. சின்னையன், எல்.சி.மணி, தா. வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.