districts

img

தேசிய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஆட்டோ ஓட்டுநரும் சிபிஎம் பாராட்டு

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற தேசிய வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் மாஸ்டர் பிரிவில் தங்கம் வென்ற புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநரும், சிஐடியு ஆட்டோ சங்க புதுச்சேரி பிரதேச தலைவருமான மது (எ) லிங்கேசன் வேலுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம்  கதராடை அணிவித்து பாராட்டினார். அதேபோல் சிஐடியு பிரதேச தலைவர் முருகன், செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, மதிவாணன், ரவிச்சந்திரன், மணிபாலன், விஜயகுமார் ஆகியோரும் வீரர்களை பாராட்டி வரவேற்றனர்.