சென்னை, பிப். 15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறி யலையடுத்து புதிய அரசு மதுபானக்கடை திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி 138ஆவது வட்டம் மேற்கு ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு பிரதான சாலையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நீண்ட நாட்களாக மதுபானக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகமும், அதிகாரிகளும் முயற்சித்து வருகின்றனர். பொது அமைதிக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி தொடர்ந்து போராட்டம் நடத்தி கடை திறப்பதை தடுத்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் புதிய மதுபான கடை திறக்க அதிகாரிகள், ஒரு வீட்டின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்து, பணிகளை தொடங்கினர். இதையறிந்த சிபிஎம் ஊழியர்கள் சனிக்கிழமையன்று (பிப்.15) அந்த வீட்டின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து அசோக் நகர் காவல்துறை உதவி ஆணையர் சிபிஎம் தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மதுபான கடை திறப்பதை நிறுத்தி வைப்ப தாக உறுதியளித்தார். வீட்டின் உரிமை யாளர் டாஸ்மாக் நிர்வாகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அளித்த கடிதத்தை காவல்துறையினர் பெற்றுக் கொண்டனர். இதில் சிபிஎம் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.செங்கல்வ ராயன், ச.ஆனந்தகுமார், விருகம்பாக்கம் பகுதிக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ண மூர்த்தி, கந்தன், பிரகாஷ், நிரஞ்சனா, கார்த்தி, கிளைச் செயலாளர்கள் ஜெய ராமன், முருகன், வாலிபர் சங்க பகுதித் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.