சிதம்பரம், மார்ச் 16- காட்டுமன்னார்குடி லால்பேட்டை சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் 10க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரு கின்றனர். இவர்கள் குடியிருந்து வரும் வீடு களுக்கு வீட்டு வரி ரசீது, மின் கட்டண ரசீது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கையொப்பமிட்ட வாடகை ரசீது உள்ளிட்டவை 60 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி வருகின்றனர். எனவே இம்மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் பிர காஷ் தலைமையில் வட்டக் குழு உறுப்பி னர்கள் புகழேந்தி, பொன்னம்பலம், சாகுல் ஹமீது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்டவர்கள் காட்டுமன்னார்குடி வரு வாய் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.