ஒன்றிய அரசின் ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற வஞ்சக திட்டத்தை கண்டித்தும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நவ.8-15 தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இதன் ஒருபகுதியாக மத்திய சென்னை மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிறன்று (நவ.10) பிரச்சாரம் நடைபெற்றது. திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.பழனி, சீனிவாசன், பகுதி செயலாளர் தோழர் கபாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.