சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 79வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சரவணன் குமார், துணை பேரவை தலைவர் ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், பெருமாள், கொளஞ்சியப்பன்,சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிங்காரவேலர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.