பெட்ரோலிய பொருட்களின் விலை மற்றும் மருந்துகளின் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சனிக்கிழமையன்று (ஏப். 2) சென்னை மாநகராட்சி 58ஆவது வட்டம் பெரியமேட்டில் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் ஆர்ப்பாட்டத்தில் எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், கிளைச் செயலாளர் மனோகர் மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் வட்டம் கொளம்பாக்கம் கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கலையரசி உள்ளிட்டோர் பேசினர்.
வடசென்னை மாவட்டம் திருவெற்றியூரில் பகுதிக் குழு உறுப்பினர் கே. வெங்கடய்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் செல்வகுமாரி, கிளைச் செயலாளர்கள் விஜயலட்சுமி, ஜான்சன், சிட்டி பாபு உள்ளிட்டோர் பேசினர்.
திருப்போரூர் ஒன்றியம் தண்டலம் கிளையில் சார்பில் ஒன்றியக் குழு உறுப்பினர் கே. லிங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அருள்ராணி, பாரதி நகர் பெண்கள் கிளையின் செயலாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.