districts

img

சிபிஎம் உறுப்பினர் அகால மரணம்

சென்னை, மார்ச் 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அண்ணாநகர் பகுதி 106வது வட்டம் பி கிளை உறுப்பினர் பொன்ராஜ் சனிக்கிழமை யன்று (மார்ச் 1) அகால மரண மடைந்தார். அவருக்கு வயது 50. அன்னாரது உடல் ஜெ.டி. துரை நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த உடலுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, அண்ணாநகர் பகுதிச் செயலாளர் கே.மகேந்திர வர்மன், மாவட்ட குழு உறுப்பினர் பா.சுந்தரம், பகுதிக்குழு உறுப்பினர் எம்.ஆனந்தன், கிளைச் செய லாளர்கள் சுந்தர்ராஜ், ஜெ.பி.  கோபால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று (மார்ச் 2) அரும்பாக்கம் மயானத்தில் நடைபெற்றது.