கடலூர், பிப்.11- சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு கடலூரில் உள்ள அவருடைய சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், சுதந்திரப் போராட்ட வீரர் , சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 79-வது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (பிப்.11) அனுசரிக்கப்பட்டது. கடலூர் சிஐ டியு அலுவலக வளாகத்தில் உள்ள சிங்கார வேலனார் முழு உருவ சிலைக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், செயற்குழு உறுப்பினர் வி.சுப்பு ராயன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலு, செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுந்தரமூர்த்தி, அனைத்து குடியிருப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் எம். மருதவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.