கிருஷ்ணகிரி, அக்.6- மாங்காய், புளி பாதுகாப்பு குளிர்சாதன கிடங்கு அமைத்து கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி வட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி வட்ட 15 வது மாநாடு தோழர்.அண்ணாஜி நினைவகத்தில் நடைபெற்றது. கே.சி.ராமசாமி கொடியேற்றி வைத்தார். வட்டக் குழு உறுப்பினர் ஜெய்சங்கர் அஞ்சலி தீர்மான வாசித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ராஜா வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் துவக்க உரையாற்றினார். வட்டச் செயலாளர் பெரியசாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி வாழ்த்திப் பேசினார். மாது நன்றி கூறினார். தீர்மானம் மாங்காய், புளி விளைச்சலில் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ள கிருஷ்ணகிரியில் அதற்கான குளிர்பாதன கிடங்கு அமைக்க வேண்டும். மாங்கூழ் தொழிற்சாலை அரசு சார்பில் அமைக்க வேண்டும். ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்,கிருஷ்ணகிரி வட்டத்தில் அதிகப்படியாக நடைபெற்று வரும் கனிம வள கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டக் குழு தேர்வு இந்த மாநாட்டில் வட்டச் செயலாளராக ஜி.பெரியசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.