districts

img

பன்னியாண்டி இன மக்களுக்கு சாதி சான்று வழங்குக: சிபிஎம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி,டிச.27- ஏழை,எளிய தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனையும் புறம்போக்கு நிலத்தில் குடி யிருப்பவர்களுக்கு பட்டாவும், பன்னி யாண்டி இன மக்களுக்கு சாதி சான்றும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் வசிக்கும் ஏழை தலித் மக்க ளுக்கு இலவச வீடு, வீட்டுமனை வழங்க வேண்டும், புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பன்னியாண்டி இன மாண வர்களுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் போச்சம்பள்ளி வட்டக் குழு சார்பில் பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது. வட்டச் செயலாளர் சாமு தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு,மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், மகாலிங்கம், பிரகாஷ் மாவட்டக் குழு உறுப்பினர் இளவரசன், பேரூராட்சி வார்டு உறுப்பினர் கடல் வேந்தன்,முன்னாள் மாவட்டச் செய லாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.