புதுச்சேரி,ஆக.22- மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும். மின்துறை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி நேரு, காந்தி வீதி சந்திப்பில் இருந்து மிஷன் வீதி வரை மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பி னர்கள் வெ.பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா, நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், உழவர் கரை நகர செயலாளர் ராம்ஜி, இடைக்குழு செயலாளர்கள் ராமமூர்த்தி, சரவணன், அன்புமணி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ராமசாமி, சரவணன், இளவரசி,ரமேஷ், சஞ்சய் சேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.