கடலூர், ஜூன் 7-
வாழை விவசாயிக ளுக்கு நிவாரண வழங்க வேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடலூர் பகுதியில் திடீ ரென்று அடித்த சூறைக் காற்றால் பல்லாயிரக் கணக்கான. வாழை மரங்கள் சாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதா ரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக கீரப்பாளை யம், கொடுக்கன் பாளை யம், ஓதியடி குப்பம், அரசடி குப்பம், மாவடி பாளையம், ராமாபுரம், சாத்தங்குப்பம், புலியூர், காட்டுச்சாகை கிராமங்களில் ஏக்கருக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை வாழை பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேத மடைந்த வாழைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் ராஜேஷ் கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலை வர் எஸ். தக்ஷிணாமூர்த்தி, வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “வழை பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம், வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து அனைத்து விவசாயிக ளுக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் வாழை விவசாயிகளை பாதுகாக்க வாழைக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அமலாக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.