கடலூர், மே 4-
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் மாவட்ட முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்ட முழுவதும் சாகுபடி நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடலூர் வட்டம் வானமா தேவி, கண்டகாடு, நாணமேடு, கிரு ஷ்ணாபுரம், உச்சிமேடு, கீழ் அழிஞ்சிப்பட்டு, பாலூர், மாளிகை மேடு கிராமங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. நெல், மரவள்ளி, மணிலா, கத்திரி, வெண்டை, பூஞ்செடி, பாகல், வெள்ளேரி, எள், உளுந்து போன்ற பயிர்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. தண்ணீரை வெளியேற்றி பயிர்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், வேளாண்துறை தோட்டக்கலைத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் திட்டக்குடி, போத்த மங்கலம், கொட்டாரம், மேலூர், பட்டூர், கோடாங்குடி, எழுமாத்தூர், வையங்குடி ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந் துள்ளது. இதனை உடனடியாக கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாச்சலம் அருகே கோமா விடந்தல் பகுதியில் வி.சாத்தமங்கலம் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரப் படாதால் விவசாய நிலத்தில் மழை நீர் தேங்கி 25 ஏக்கர் நெல் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தண்ணீரை வெளியேற்றவும், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சிறுபாக்கம் பகுதியில் சிறுபாக்கம், மாங்குளம், மா.குடிகாடு, அடரி, மங்க ளூர், அரசகுடி உள்ளிட்ட கிராமங்களில் மரவள்ளி செடிகளை வெள்ளை காரை நோய் தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர். தோட்டக்கலைத்துறை ஆய்வு செய்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.