districts

தலித் மக்களின் வீடு எரிப்பு உரிய விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை

திருவண்ணாமலை,ஜன.19- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா கொட்டாவூர் கிராமம் அண்ணா நகர் பகுதியில் குமார், அவரது மனைவி, மகன் என  ஒரே ஒரு  தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.   இந்நிலையல்,  பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த இளைஞருக்கும், தலித் இளைஞருக்கும் வாய் தகராறு நடந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட இளைஞர் அங்குள்ள பெரும்பான்மை ஆதிக்க சாதியினர் ஆதர வோடு ஒன்று சேரந்து குமார்,அவரது மனைவி,அவரது மகன் பவுன்குமார் உள்ளி ட்டோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த செங்கம் காவல் துறையினர் சனிக்கிழமை இரவு சுமார் 10 மணி வரை கொட்டாவூர் கிராமத்தில் அண்ணா நகர் பகுதியில் உள்ள மேற்கண்ட  குமார் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுத்துள் ளனர்.  அதன்பிறகு குமார் என்பவரின் வீடு இரவு சுமார் 12 மணிக்கு  தீயிட்டு கொளுத்த ப்பட்டுள்ளது. அதில் குமார் குடும்பத்தினரின் உடைமைகள்,  அரசு ஆவணங்கள், புத்தக ங்கள் மற்றும் சில உணவு பொருட்கள் எரிந்துள்ளது. இருசக்கர வாகனம் சேதப்ப டுத்தப்பட்டுள்ளது. செங்கம் காவல் நிலை யத்தில் ஆதிக்க சக்திகள் 7 பேரின் மீது வழக்கும், பட்டியலின குமார் குடும்பத்தினர் 3 பேர் மீதும் அடிதடி சம்பந்தமாக வழக்கும் என இரு தரப்பினர் மீதும் வழக்குபதியப் பட்டு இருதரப்பினரையும் கைது செய்துள் ளனர். இது தொடர்பாக சிபிஎம்  வட்டார செய லாளர் கணபதி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சிஎம்.பிரகாஷ், சிபிஎம்  இடைக் குழு உறுப்பினர்கள் எம்.கண்ணன், எம்.சர வணன்,எஸ்.சதீஷ் மற்றும் நிர்வாகிகள்  டைலர் ரவி, ரஞ்சித் உள்ளிட்டோர்  நேரில் சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட பட்டியலின குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கி முறையான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.