கடலூர்,டிச .28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 23-வது மாநாடு வடலூர் நகரில் கோலாக லமாக எழுச்சியுடன் துவங்கியது. டிசம்பர் 28,29 இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடின் துவக்க நிகழ்ச்சியாக வடலூர் பேருந்து நிலையம் அருகே மக்கள் ஒற்றுமை ஜோதி பயணம் மற்றும் கொடி பயணத்தை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட மக்கள் ஒற்றுமை ஜோதியை அரசியல் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கொடுக்க, தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். செங்கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் பெற்றுக் கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார். இதையடுத்து, செந்தொண்ட ர்கள் அணி வகுப்புடன் புற ப்பட்ட ஊர்வலம் வடலூர்- கும்பகோணம் சாலையிலுள்ள மங்கையர்கரசி மண்டபம் தோழர்கள் எஸ்.துரைராஜ், டி. ராஜாராமன் நினைவரங்கத்திற்கு வந்ததடைந்தது. மாநாட்டு கொடியை மூத்த தோழர் வி.முத்துவேல் ஏற்றிவைத்தார். மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த நினைவு தூபிக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு முன்மொழிந்தார். மாநாட்டின் வரவேற்புக் குழு தலை வர் ஏ.நமச்சிவாயம் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் அரசியல் ஸ்தாபன அறிக்கையையும், மாநிலக் குழு உறுப்பினர் மூசா நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். “இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல” என்கின்ற புத்தகத்தை மாநிலக் குழு உறுப்பினர் மூசா வெளியிட, மாணவர் சங்கத்தின் சௌமியா பெற்றுக்கொண்டார். ‘தத்துவம் என்றால் என்ன?’ என்ற புத்தகத்தை செயற்குழு உறுப்பினர் எம்.மருதவாணன் வெளியிட. வாலிபர் சங்க நிர்வாகி செந்தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார். மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுக் கண்காட்சியை மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் திறந்து வைத்தார்.