சென்னை,டிச.27- சென்னையில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என் மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர் ஜெயராமன் வலியுறுத்தினார். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 1 ல் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் முழு இழப்பீடு வழங்க கோரி மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து பகுதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (டிச.27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி 4,வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர் ஜெயராமன் பேசியதாவது: டிசம்பர் 3,4,5 தேதிகளில் கொட்டி தீர்த்த மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம் திருவொற்றி யூரின் மேற்கு பகுதியை பெரிதும் பாதித்தது. 2015 ஆம் ஆண்டு பெய்த மழையின் அளவை விட 10 சென்டி மீட்டர் அதிகமாக மழை பெய் துள்ளது. ஆனால் தண்ணீர் குறைவாகவே தேங்கியது. இருப்பினும் சிபிசிஎல் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் இருந்து வெளி யேறிய எண்ணை கழிவுகள் திருவொற்றியூர் மேற்கு பகுதி முழுவதும் பல வீடுகளுக்குள் சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் இன்று வரை வீடுகளில் சென்று மக்கள் வசிக்க முடியாத நிலையில் உள்ளனர். இரவு - பகலாக மீட்பு பணி மழை பெய்த உடனே தமிழ்நாடு அரசு, மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் இரவு பகலாக மீட்புப்பணியில் ஈடுபட்டதை குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி ஐஏஎஸ் நான்காவது வார்டில் தினமும் வந்து ஆதிதிராவிடர் காலணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண பணிகளையும் மீட்பு பணிகளையும் மேற்கொண்டார். மேலும் தலைமைச் செயலா ளர், மாநகராட்சி ஆணையர் வந்து பார்வை யிட்டு உடனடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டது பாராட்டத்தக்கது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரிசி பருப்பு சமையல் பாத்திரங்கள் புடவை லுங்கி உள்ளிட்ட 32 பொருட்கள் தொகுப்பை மக்களுக்கு வழங்கியதும் பாராட்டுக்குரியது. இருப்பினும் மக்களின் இழப்பை ஈடு கட்ட முடியாது. ஆயில் அதிகமாக வந்ததால் பலருடைய பைக், ஆட்டோ, கார், லோட் வண்டிகள், மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், டிவி வாஷிங் மெஷின், உடைகள், சமையல், பாத்திரங்கள் உட்பட அனைத்தும் தண்ணீரில் முற்றிலுமாக பழுதடைந்துவிட்டது. வீடுகளில் மழைநீர் புகுந்து மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் வீட்டிற்குள்ளும் வசிக்க முடியாமல் வீதியில் நிற்கிறார்கள். எனவே ஒவ்வொரு குடும்பத்திற் கும் இழப்பீடு என்னவென்று தனித்தனியாக சர்வே எடுத்து அந்த இழபுக்கு ஏற்ப சரிபாதி அளவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனம் சிபிசிஎல் நிறுவனம் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். ஆண்டு கடந்த ஆண்டின் நிகர லாபம் மட்டும் 1400 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. எனவே தமிழ் நாடு அரசு சிபிசிஎல் நிறுவனத்திடம் பேசி 1,2,4,6,7 வட்டங்களில் பாதித்த அனைத்து பகுதி மக்களின் இழந்த உடமைகளை மதிப்பீடு கேற்ப இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வார்டுகளில் அமைந்துள்ள சிறு குறு தொழிற் பட்டறைகள் கடைகள் இவர்களுக்கு ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். கால்வாய் கரைகளை உயர்த்துக நிரந்தர தீர்வாக பக்கிங் கால்வாயின் கரையை இருபுறமும் குறைந்தது 5 அடி உயர்த்திட வேண்டும். ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிப்பு செய்ய வேண்டும். 100 மீட்டருக்கு ஒரு இடத்தில் ஸ்வீஸ் கேட் அமைத்து பம்ப் ரூம் கட்ட வேண்டும். இவைகளை செய்யும் போது தான் நிரந்தரத் தீர்வை காண முடியும். இவ்வாறு ஜெயராமன் பேசினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாக்கியலட்சுமி பேசும்போது, ‘
ஆறாவது வட்டத்தில் சரஸ்வதி நகர், 7வது வட்டத்தில் ராதாகிருஷ்ணன் நகர், சார்லஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சர்வே எடுக்கவில்லை. அந்த பகுதியும் எண்ணை படலத்தால் பாதித்த பகுதிதான் எனக்கூடிய அதற்கான புகைப்படங்களை காண்பித்தார். அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியிலும் சர்வே எடுக்க வேண்டும் என கோரிக்கையை மனு கொடுக்க மாநகராட்சி மண்டல அலுவல கத்திற்கு சென்றால் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்புவதும் அனுப்புகிறார்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் மண்டல அலுவலகத்திற்கு அனுப்புகிறார்கள் என கூறுகிறார்கள். இப்படி பெண்களை அலைக்கழிப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அப்பகுதி மக்களுக்கு தலைசுற்றல் வாந்தி என பல நோய்கள் வருகிறது. எனவே சிபிசிஎல் நிறுவனத்திடம் கூடுதலாக நிதி பெற்று முழுமை யான நிவாரணம் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், அலுவலர் கந்தசாமி, மீன்வளத்துறை இயக்குநர், உயர் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் சொக்கலிங்கம், கார்த்திக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன், சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.