districts

img

கழிவு நீரை அகற்ற கோரி: சிபிஎம் கவுன்சிலர் போராட்டம்

சென்னை, டிச. 5 - நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் போராட்டம் நடத்தினார். தாம்பரம் மாநகராட்சி 28வது வார்டுக்கு உட்பட்டது கக்கலாஞ்சாவடி. இந்த பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் தெருக்களில் வழிந்தோடுவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து புகார் செய்தால் அவ்வப்போது அடைப்புகள் அகற்றப்படும். அடுத்த சில நாட்களில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி அப்பகுதி மக்கள் 2வது மண்டலக்  குழு அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 28 வது வார்டு கவுன்சிலர் ஜி.விஜய லட்சுமி, “கக்கலாஞ்சாவடியில் உள்ள பாதாள சாக்கடை குழாய் சிறியதாக உள்ளது. இதனால் அடிக்கடி அடைப்பு ஏற்படு கிறது. கடந்த 6 மாதமாக சாலையில் கழிவுகள் வழிந்தோடிக் கொண்டே இருக்கிறது. அதனை மிதித்துக் கொண்டே வீடுகளுக்குள் மக்கள் செல்ல வேண்டி உள்ளது. இந்த குழாய்களை மாற்றி அமைக்க 6.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் தொடங்கப் படாமல் உள்ளது. கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மண்டலக்குழு தலைவர் ஜோசப் ஆகியோரிடம் கவுன்சிலர் ஜி.விஜய லட்சுமி பேசினார். அதன்பிறகு அதிகாரி கள் பேச்சு  நடத்தி, குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கு வதாக உறுதியளித்தனர்.  இதனைத் தொடர்ந்து தெருவில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் தொடங்கினர். இந்த போராட்டத்தில் கட்சியின் பல்லா வரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் சிந்தன் உள்ளிட்டோர் பேசினர்.