திருப்போரூர், நவ.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட 24 வது மாநாடு திருப்போரூரில் ஞாயிறன்று ( நவ. 10) செந்தொண்டர் பேரணியுடன் எழுச்சியுடன் தொடங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். செல்வம் தலைமையில் நடை பெற்ற மாநாட்டு துவக்க நிகழ்வில் கட்சி யின் கொடியை மாவட்டக் குழு உறுப்பி னர் ஜி.மோகன் ஏற்றி வைத்தார். செங்கல்பட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தோழர் வேதகிரி நினைவு மாநாட்டு கொடியை மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயந்தி வழங்க மாவட்ட குழு உறுப்பினர் என்.பால்ராஜ் பெற்றுக்கொண்டார். கூவத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட தோழர் ராமானுஜம் நினைவு ஜோதியை மாவட்டக் குழு உறுப்பி னர் வெள்ளி கண்ணன் வழங்க மாவட்ட குழு உறுப்பினர் பி.சண்முகம் பெற்றுக்கொண்டார். திருக்கழுக்குன்றத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சி.ஐயப்பன் நினைவு ஜோதியை திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் ரபீக் வழங்க மாவட்டக் குழு உறுப்பினர் கலையரசி பெற்றுக் கொண்டார். மதுராந்தகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மறைந்த தோழர்கள் தனசேகரன் ரவீந்திரன் ஆகி யோரின் நினைவு ஜோதியை மாவட்டக் குழு உறுப்பினர் மாசிலா மணி வழங்க மாவட்டக் குழு உறுப்பினர் தமிழ் பாரதி பெற்றுக் கொண்டார் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொது நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், மாவட்டச் செயலாளர் பசு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், திருப்போரூர் பகுதி செயலாளர் எம்.செல்வம் உள்ளிட்ட பலர் பேசினர். இதனைத் தொடர்ந்து துவங்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் வாசித்தார். முன்னதாக திருப்போரூர் பகுதி செயலாளர் எம் செல்வம் வர வேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர் பா.ஜான்சி ராணி பேசினார். கட்சி யின் மாவட்டச் செயலாளர் பசு.பாரதி அண்ணா வேலை அறிக்கையும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இரண்டாவது நாளாக திங்களன்றும் மாநாடு தொடர்ந்து நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் மாவட்டக்குழுவும் மாவட்டச் செயலாளரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.