திருவள்ளூர், மே 23- விவசாய நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி பள்ளிப்பட்டு சுற்று வட்டாரத் தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று (மே 22) பைக் பிரச்சா ரம் நடைபெற்றது. முப்போகம் விளையக் கூடிய விவசாய நிலங்களில் ஒன்றியஅரசு,6வழிச்்சாலை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகளின் எதிர்ப்பை மீறி முப்போகம் விளையக் கூடிய நிலங்களை கையகப்ப டுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பள்ளிப்பட்டு சாமந்தவாடா கிராமத்தில் நடைபெற்ற பைக்பிரச்சார த்தை சிபிஎம் கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன் துவக்கிவைத்தார். கட்சியின் வட்டச் செய லாளர் எஸ்.ரஜினி தலைமை தாங்கினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.பெரு மாள், வட்டக் குழு உறுப்பின ர்கள் கணேசன், ஜெயச்சந்தி ரன், செல்வம், குப்பன் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். புண்ணியம், பொதட்டூர் ்பேட்டை, பொம்மராஜ பேட்டை, சொரக்காய்ப் பேட்டை, திருமால் ராஜ பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பள்ளிப்பட்டில் கட்சியின் முன்னாள் மாவட்டச் செய லாளர் கே.செல்வராஜ் பிரச் சாரத்தை நிறைவு செய்து பேசினார்.