districts

img

கதிர்ஆனந்தை ஆதரித்து குடியாத்தம் நகராட்சியில் சிபிஎம் பிரச்சாரம்

வேலூர், ஏப்.12– வேலூர் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் து.மு.கதிர் ஆனந்தை ஆதரித்து  சிபிஎம்  சார்பில் குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட 7,23,24 வார்டுகளில் பொதுமக்களை சந்தித்து துண்டுபிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சிபிஎம் நகர செயலாளர் பி.காத்த வராயன், மாவட்டக்குழு உறுப்பினர் குபேந்திரன், நகரக்குழு உறுப்பினர் பாபு, லெனின், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று வேலூர் தெற்கு தாலுகா குழு சார்பில் தொரப்பாடி, அரியூர் விஸ்வ நாதன் நகர் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று  வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் தாலுகா செயலாளர் எஸ்.செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம், நரசிம்மன், பாபு, ஷோபா, சம்பத், கீதா, அய்யனார் ஆகியோர் பங்கேற்றனர்.