districts

img

எலவனாசூர் பேட்டையில் சிபிஎம் கிளை துவக்க விழா

கள்ளக்குறிச்சி, நவ-29 கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க விழா பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர்  கலந்து கொண்டு செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். கிளைச் செயலாளர் ஜே. அசாருதீன் வரவேற்றார். ஜே.இம்தியாஸ் முன்னிலை வகித்தார். ஷேக் ஆரிப், முத்து தங்கதுரை, மாறன், ராஜகோபால் மற்றும் ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன், ெஜயமூர்த்தி, பச்சையப்பன், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிடாகம் ஊராட்சியில் காலை, மாலை நேரங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.  எலவனாசூர் கோட்டை, பிடாகம் ஊராட்சியை பேரூராட்சி யாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.