districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு: கடலூரில் வரவேற்பு குழு அமைப்பு

கடலூர், ஜன.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டு பணிகள் தீவிர மடைந்துள்ள நிலையில், மாவட்டம் தோறும் வரவேற்பு குழு அமைத்து மாநாட்டு பணி களை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கடலூர் மாவட்டத்தில் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் செயற்குழு உறுப்பினர் பி.கருப்பயன் தலை மையில் நடைபெற்றது. மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஜி.ரமேஷ் பாபு ஆகி யோர் கலந்து கொண்டனர். மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் 301 பேர் கொண்ட வர வேற்பு குழு அமைக்கப்பட்டது. தலைவராக எஸ். ஜி.ரமேஷ்பாபு, செயலாளராக கோ.மாதவன், பொருளாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. தேன்மொழி தேர்வு செய்யப்பட்டனர்.