districts

img

மூடிக்கிடக்கும் காவலர் குடியிருப்பு வீணாகும் மக்கள் வரிப்பணம்

அம்பத்தூர், டிச. 18- ஆவடியை அடுத்த திருமுல்லை வாயில் பகுதியில் ரூ.1.2 கோடியில் காவலர் வீட்டு வசதி கழகத்தால் கட்டப் பட்ட குடியிருப்புகள் 12 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடிக்கிடப்பதால் பாழாகி வருகிறது. இதனை சீரமைத்து உடனடியாக திறக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என காவ லர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் காவல் அதிகாரிகள், காவலர்களுக்கு வீடுகள் சொந்தமாகவும், வாடகைக்கும் கட்டி கொடுக்கப்படுகிறது. இங்கு அதிகாரிகள், காவலர்கள் குடும்பத்து டன் வசித்து வருகின்றனர். அதன்படி ஆவடி அருகே திரு முல்லைவாயில் - செங்குன்றம் சாலை, அரிக்கம்பேடு பகுதியில் புழல் ஏரிக்கரையில் காவல் அதிகாரி களுக்கும், காவலர்களுக்கும் தனித் தனியாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள் ளது. இங்கு அதிகாரிகள், காவலர்கள் என தனித்தனி பிரிவுகளாக 14 வீடுகள் ரூ.1.2 கோடி செலவில் 12 ஆண்டு களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டன. ஆனால் இதுவரை யாருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு திறக்கப்பட வில்லை. பல ஆண்டுகளாக பயன் படுத்தப்படாமல் பூட்டியே கிடப்பதால் வீடுகள் பாழாகி வருகிறது. இங்குள்ள வீட்டின் ஜன்னல், கதவு களை சமூக விரோதிகள் உடைத்து உள்ளே சென்று வருகின்றனர். மேலும் இரவு, பகல் பாராமல் வீட்டுக்குள் மது அருந்திவிட்டு, பாட்டில்களை  வீசி விட்டுச் செல்கின்றனர். இதனால் இச்சாலையில் வாகன ஓட்டிகள், பாத சாரிகள் அவதிக்கு ஆளாகி வரு கின்றனர். மேலும், கட்டிட வளாகத்தில் இரவு நேரங்களில் மர்மநபர்களின் நட மாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த குடியிருப்பு வளா கத்தில் முட்புதர்கள் வளர்ந்து மண்டி  கிடக்கிறது. இதில் இருந்து வெளி வரும் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் குடியிருப்போர் அச்சத்துடன் வசிக்கும் சூழல் ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து காவலர்கள் கூறுகை யில், அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பலர் சொந்த வீடு இன்றி தவிக்கின்றனர். இவர்கள் மாதந் தோறும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை வாடகை கொடுக்கின் றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் வீடு களை தங்களுக்கு ஒதுக்கினால் பயனு ள்ளதாக இருக்கும். மேலும், காவலர் வீட்டு வசதி வாரியத்திற்கு வருவாய் கிடைக்கும். இதனை சீரமைத்து, திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.