சென்னை,ஆக.25-
நுங்கம்பாக்கத்தில் காய்கறி வியாபாரிகளிடம் கள்ள நோட்டுகளை மாற்றியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1 கோடிக்கும் அதிகமாக கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட் டுள்ளது. இதற்கான உத்தரவு ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார்.