districts

img

41வது வார்டில் துர்நாற்றம் வீசும் குடிநீர்

சென்னை, ஏப். 28 - சென்னை மாநகராட் சிக்கு உட்பட் 41வது வார்டில்   குழாய்களில் வரும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக வும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்  குடிநீர் வடிகால் வாரிய  அதிகாரிகள் செயல்படுவ தாகவும்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கவுன்சிலர்  பா.விமலா  குற்றம்சாட்டி னார். பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டம் வெள்ளி யன்று (ஏப்.28) ரிப்பன் மாளி கையில் மேயர் ஆர்.பிரியா  தலைமையில் நடை பெற்றது. இந்தக்கூட்டத்தில் 41 வது வார்டு சிபிஎம் உறுப்பி னர் பா.விமலா பேசியதன் சுருக்கம் வருமாறு: கழிவு நீரை அல்ல குடி நீரை கூட சுத்திகரித்து வழங்க  முடியாத நிலையில் குடிநீர்  வடிகால் வாரியம் செயல்படு கிறது. 41வது வட்டத்தின் அரு கில் கழிவூநீர் சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது. இருப்பினும், வார்டு முழுவ தும் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு, மக்களை துர்நாற் றத்தில் வாழும் நிலைக்கு தள்ளி உள்ளது. 200 பகுதி பொறியாளர் கள் இருக்க வேண்டிய சென்னை மாநகராட்சியில் 98  இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடு கள் வாரியத்திடம் இல்லை. மக்கள் குடிக்க முடியாத அளவில் துர்நாற்றம் வீசும் தண்ணீர் வருகிறது. வாரிய உதவி பொறியாளர், பகுதி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடசென்னையை புறக்கணிக்காதீர் சென்னை ஆறுகளில் கலக்கும் கழிவுநீரை தடுத் திட 205 கோடி ரூபாய் மதிப் பீட்டில் பணிகள் முடிந்துள் ளது. அதில், ஒரு திட்டம் கூட வடசென்னை பகுதியில் செயல்படுத்தவில்லை. வடசென்னை பகுதியை புறக்கணிக்க கூடாது

மேம்பாலப்பணிகள்

மாற்றுபாதைகளை ஏற்பாடு செய்யாமல், கணேச புரம் மேம்பாலம், ஸ்டீபன் சன் சாலை மேம்பாலம், யானைகவுனி மேம்பாலப் பணிகள் துவக்கப்பட்டது. இந்த மூன்று மேம்பால பணிகளும் 2 கிலோ மீட்டர்  சுற்றளவிலேயே நடை பெறுகிறது. இதனால் இப்பகுதிகளில் சாலை களை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளா கின்றனர். குறிப்பாக, ஸ்டீபன்சன் சாலை மேம்பாலம் மற்றும் யானைகவுனி மேம்பால கட்டுமானப்பணி துவங்கி பல ஆண்டுகளாகியும் முடிக் காமல் உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி  இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

அம்மா உணவகம்

அம்மா உணவகங்களில் பெரும்பாலானவற்றில் போதுமான அரவை எந்திரங் கள் இல்லை. இதனால் ஊழி யர்கள் வெளியில் அரைத்து கொண்டு வருகின்றனர். உணவகத்திற்கு தேவை யான பொருட்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். 41 வது வார்டு உதவி பொறியாளர், இணை பொறி யாளருக்கு அலுவலகம் இல்லை. மன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ள இடம் பாதுகாப்பற்றதாக உள்ளது. எனவே, ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலகம் கட்டித்தர வேண்டும். கொருக்குப்பேட்டை மேம் பால பணிகள் நடைபெறுவ தால், 3 கிலோ மீட்டர் சுற்றிவர  வேண்டி உள்ளது. எனவே,  அன்னை சத்தியா நகர்  அருகே ரயில்வே சுரங்க பாலப் பாதையை சீரமைத்து, தெருவிளக் குகள் அமைத்து கொடுக்க வேண்டும்.

மழைநீர் கால்வாய்

எண்ணூர் நெடுஞ்சாலை யில் மழைநீர் கால்வாய் பணி  பாதி தூரம் அமைக்கப்பட் டுள்ளது. அவசர அவசரமாக இந்த கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநகரம் முழுவதும் கால் வாய்கள் இணைக்கப் படாமல் உள்ளது. இதனால் மழைக்காலத்தை சமாளிப்பது சிரமமானது. இந்த மன்றம் பொறுப் பேற்று ஓராண்டை கடந்தும்  41வது வட்டத்தில் புதிதாக  ஒரு சாலை கூட அமைக்கப் படவில்லை.

தூய்மைப் பணி

42வது வார்டில் முழு மையாக தூய்மை பணியை  மேற்கொள்ள முடிய வில்லை. கடுமையாக பணி  செய்தாலும், தூய்மை பணி யாளர்கள் பற்றாக்குறை யால் மக்களிடம் நல்லபெயர் எடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் நிரந்தரப் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களையாவது நிரப்ப வேண்டும். கூடுத லாக 20 ஊழியர்களை நியமிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசி னார். இதற்கு பதிலளித்த துணைமேயர் மகேஷ் குமார், குடிநீர் வாரிய அதிகாரிகள் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இதர பிரச்சனைகள் மீது துறை அலுவலர்கள் நடவ டிக்கை எடுப்பார்கள் என்றார். ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதிலளிக்கையில், 41வது வார்டில் 8 சாலைகள் அமைப்பதற்கான பணி ஆணை நான்கு நாட்களுக்கு  முன்பாக வழங்கப்பட்டுள் ளது என்றார்.