districts

img

19 மாதங்களாக நீடிக்கும் தெரு விளக்கு பிரச்சனை

சென்னை, நவ. 18- சென்னை மாநகராட்சி திரு வொற்றியூர் மண்டலக் குழு கூட்டம் மண்டலத் தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 56 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் பேசுகையில், 4ஆவது வார்டுக்குட்பட்ட விம்கோ ரயில் நிலை யத்தை 4, 6, 7 வார்டுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. பல நேரங்களில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள். அப்பகுதியில் தெருவிளக்கு அமைக்கப்படாததால் இருளில் சமூக விரோதிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக இச்சாலையில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்.  தினசரி நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்ளும் முருகப்பா குளம் பூங்காவில் தெரு விளக்கு அமைக்க வேண்டும். வார்டு முழுவதும் துருபிடித்து ஆபத்தான நிலையில் உள்ள 500க்கும் மேற்பட்ட தெரு விளக்கு கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை கடந்த 19 மாதங்களாக வலி யுறுத்தி வருகிறேன். கேட்கும் போது ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக கூறு கிறார்கள். ஆனால் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. மின்சார வாரியம் மிகவும் மெத்தனமாக செயல்படுகிறது. அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுகிறது. குறைந்த மின்அழுத்தம் காரணமாக மின் பொருட்கள் சேதமடைகின்றன. 11 கி.வா. மொபைல் சர்வீஸ் திருவொற்றியூருக்கு கொண்டுவர வேண்டும். சாத்தங்காடு, எர்ணாவூர் மின் அலுவலகங்களில் எப்.ஓ.சி. அமைக்க வேண்டும். சாலைகளில் உள்ள மின் பில்லர்கள் கேபிள்களை முறைப்படுத்த வேண்டும். மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் ஜோதி நகர் அருகில் சாலையை கடக்க வழி ஏற்படுத்த வேண்டும். இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். ரேசன் கடைகளில் பொருட்கள் இருப்பு இல்லை என்று முதல் வாரத்திலேயே திருப்பி அனுப்பும் நிலை உள்ளது. தேவை யான அளவு பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.