மாநகராட்சி பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் ஆவடி தொகுதி செயலாளர் ஏ.ஜான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன் ஆகியோர் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமாரிடம் மனு அளித்தனர். உடன் பகுதிக் குழு உறுப்பினர் எம்.ராபர்ட் ராஜ், காமராஜர் நகர் கிளைச் செயலாளர் குணசேகரன் ஆகியோர் இருந்தனர்.