சென்னை,ஜன.11- சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் 100-க்கும் குறைவான தெருக்களில் மட்டுமே தொற்று பரவல் இருந்தது. 2 வாரத்தில் இது பல மடங்கு அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 39,537 தெருக்க ளில் ஞாயிறன்று நிலவரப்படி 4,072 தெருக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 3 பேருக்கும் குறைவாக பாதிப்புள்ள தெருக்கள் 3,260 ஆகும்.தேனாம் பேட்டை மண்டலத்தில் அதிகபட்சமாக 444 தெருக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 3 பேருக்கும் அதிகமாக தொற்று பாதித்த தெருக்கள் 812 உள்ளன. 472 தெருக்களில் 4 பேருக்கும் அதிகமான பேருக்கு தொற்று பரவி உள்ளது. 5 பேருக்கும் அதிகமாக தொற்று பரவிய தெருக்களாக 293 கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள தெருக்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இதுவரையில் சென்னையில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 512 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 20 ஆயிரத்து 267 பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகு திக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.